புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதற்காக பரிந்தர் ஸ்ரான் அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் இடக்கை பந்து வீச்சாளரான 31 வயதுடைய பரிந்தர் ஸ்ரான் சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு இந்திய அணிக்காக கிரிக்கெட்டில் களமிறங்கிய பரிந்தர் ஸ்ரான் இதுவரை இந்திய அணிக்காக 06 ஒருநாள் மற்றும் 02 டி 20 போட்டிகளில் விளையாடியுள்ளதோடு டி 20 கிரிக்கெட்டில் அறிமுகமான முதல் போட்டியிலேயே ஆட்ட நாயகன் விருதையும் பெற்றிருந்தார்.

இந்நிலையில் பரிந்தர் ஸ்ரான் ஓய்வு முடிவை அறிவித்திருப்பது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்து தெரிவிக்க