புதியவைவணிக செய்திகள்

நாட்டின் ஏற்றுமதி வருவாய் குறித்து இலங்கை சுங்கத்திணைக்களம் கருத்து

நாட்டின் ஏற்றுமதி வருவாய் குறித்து இலங்கை சுங்கத்திணைக்களத்தால் கருத்து தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதற்கிணங்க நாட்டில் தேயிலை,இறப்பர் மற்றும் தென்னை சார்ந்த உற்பத்திகளின் காரணமாக ஏற்றுமதி வருவாய் அதிகரித்துள்ளதாக இலங்கை சுங்கத்திணைக்களம் தகவல் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் கடந்த ஜூன் மாதம் ஏற்றுமதி வருவாய் ஆயிரத்து 31.2 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதுடன் இது 2023ம் ஆண்டினை ஒப்பிடுகையில் 2.58 சதவீத அதிகரிப்பாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ்வாண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூன் மாதம் ஏற்றுமதி 1.97 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

கருத்து தெரிவிக்க