இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

துப்பாக்கி ரவைகள் வைத்திருந்த நபர் கைது

நேற்று (09) கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் யுக்திய நடவடிக்கை சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இச்சுற்றிவளைப்பில் மினுவாங்கொட ஜபலவத்த பிரதேசத்தில் துப்பாக்கிக்காக பயன்படுத்தப்படும் ரவைகளை வைத்திருந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதற்கிணங்க குறித்த நபரிடமிருந்து டி-56 துப்பாக்கிகளின் 2 மெகசின்கள், 2 பிஸ்டல் ரவைகள், 144 டி-56 ரவைகள், துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 02 ரவைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கருத்து தெரிவிக்க