இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

சுரேந்திர வசந்த பெரேரா கொலை தொடர்பில் சந்தேக நபர்கள் கைது

நேற்று (ஜூலை 08) அதுருகிரியவிலுள்ள பச்சைக்குத்தும் நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 55 வயதான சுரேந்திர வசந்த பெரேரா சுட்டுக்கொல்லப்பட்டார்.

அதற்கிணங்க இன்று(ஜூலை 09) சுரேந்திர வசந்த பெரேரா சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பச்சைக்குத்தும் நிலையத்தின் உரிமையாளர் உட்பட 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்கு தெற்கு குற்றப்பிரிவினரால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் மேற்கு தெற்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் திரு.கயங்க மாரப்பனவின் நேரடிக் கண்காணிப்பில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அத்தோடு இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பச்சை குத்தும் நிலையத்தின் உரிமையாளர் அவ்வப்போது 10 இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கருத்து தெரிவிக்க