புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

டி 20 உலகக்கோப்பையை வென்று தாயகம் திரும்பிய இந்திய அணியினர்

கடந்த ஜூன் 29ம் திகதி பார்படாஸ் நகரில் நடைபெற்ற 2024ம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ரோகித் சர்மாவின் தலைமையில் விளையாடிய இந்திய அணியானது தென்னாப்பிரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டாவது முறையாக டி20 உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை வெற்றிபெற்றிருந்தது.

டி 20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்கள் நாடு திரும்பவிருந்த நிலையில் புயல் எச்சரிக்கை காரணமாக குறித்த தினம் நாடு திரும்பிடாது நேற்று (ஜூலை 03) பார்படாஸிலிருந்து தனி விமானம் மூலம் இந்திய வீரர்கள் இந்தியா புறப்பட்டு இன்று (ஜூலை 04) இந்தியா வந்தடைந்துள்ளார்களென தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது டெல்லி விமான நிலையத்தில் இந்திய அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கருத்து தெரிவிக்க