இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

படகு கவிழ்ந்து ஒருவர் பலி

இன்று (ஜூலை 03) நாகதீப தீவிற்கு கருங்கற்களை ஏற்றிச்சென்ற படகொன்று ஊர்காவற்றுறை குறிகட்டுவான் அருகில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது படகில் பயணித்த நால்வரில் புங்குடுதீவு பகுதியை சேர்ந்த 42 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஏனைய மூவரும் அப்பகுதி மக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தற்போது ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க