புதியவைவெளிநாட்டு செய்திகள்

கூட்ட நெரிசலில் சிக்கி 116 பேர் உயரிழப்பு!

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் சத்சங் நடத்திய ஆன்மிக நிகழ்ச்சியின் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 116 உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஹத்ராஸ் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளதுடன் பாதிக்கப்படவரின் குடும்பத்திற்கு இந்திய ரூபாய் 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க