புதியவைவணிக செய்திகள்

இறந்தவர்களுக்கு ஓய்வூதியம்! அரசாங்க கணக்கு குழு அறிக்கை

கம்பஹா மாவட்டத்தின் 13 பிரதேச செயலகங்களில் ஓய்வூதியம் பெற்றுக் கொண்டிருந்த 419 ஓய்வூதியர்களுக்கு கடந்த வருடம் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை அதிகளவிலான சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க கணக்கு குழுவில் தெரியவந்துள்ளது.

இறந்தவர்களுக்கு அறிவிப்பதில் தாமதம், ஆயுள் காப்பீடு வழங்காத ஓய்வூதியர்களின் ஓய்வூதியம் தற்காலிகமாக நிறுத்தப்படாமை, ஓய்வூதிய சுற்றறிக்கைகளை பின்பற்றாமை போன்ற காரணங்களால் இந்த கொடுப்பனவுகள் செய்யப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

துணை கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் கம்பஹா மாவட்ட செயலகத்தின் தற்போதைய செயற்பாடுகள் குறித்து ஆராயும் வகையில் அரசாங்க கணக்குகள் தொடர்பான குழு அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய போது இந்த தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கிணங்க ஓய்வூதியம் வழங்குவதில் ஏற்படும் முறைகேடுகள் மற்றும் பிரச்சனைகளை கண்டறிந்து அவற்றை விரைந்து தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அரசாங்க கணக்கு குழு அறிவுறுத்தியுள்ளது.

கருத்து தெரிவிக்க