இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

நீதிபதிகள் நியமனம் தொடர்பில் புதிய முடிவு

உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தவிர மற்ற பதவிகளுக்கு நீதிபதிகள் நியமனம் செய்யப்படுவதை தடுக்கும் வகையிலும் ஜனாதிபதிக்கு தடை உத்தரவு பிறப்பித்தது தொடர்பான அடிப்படை உரிமை மனுவை விரைந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

இத்தடை உத்தரவை மாற்றியமைக்க உத்தரவிடுமாறு கோரி வணக்கத்திற்குரிய தம்பர அமில தேரர் மற்றும் கலாநிதி மாஹிம் மெண்டிஸ் ஆகியோர் தாக்கல் செய்த இரண்டு இடைக்கால மனுக்களை பரிசீலித்த நீதிமன்றம் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதையடுத்து இம்மனு மீதான விசாரணையை எதிர்வரும் ஜூலை 25ம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

கருத்து தெரிவிக்க