இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

மரக்கடத்தல் வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு

நேற்று முன்தினம் (ஜீன் 23) வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் சாமந்த விஜயசேகரவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலின்படி வவுனியா ஓமந்தைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் 07 இலட்சம் ரூபா பெறுமதியான மரங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்தோடு மரக்கடத்தலில் ஈடுபட்ட வாகனம் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறித்த வாகனத்தில் மரக்கடத்தலில் ஈடுபட்டவர்கள் தப்பியோடியுள்ளனரென தெரியவந்துள்ளது.

தற்போது இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க