உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

லித்தியம் பேட்டரி தொழிற்சாலையில் தீ விபத்து

தென்கொரியா ஜியோங்கி மாகாணத்திலுள்ள ஹவாஸ்சோங் நகரில் இயங்கி வரும் லித்தியம் பேட்டரி தொழிற்சாலையில் இன்று (ஜூன் 24) திடீரென பாரியதொரு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இத்தீவிபத்தில் தொழிற்சாலையில் பணிபுரிந்த 08 தொழிலாளர்கள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளதோடு 23 தொழிலாளர்கள் குறித்து எவ்வித விபரங்களும் கிடைக்கப்பெறவில்லையென தெரியவந்துள்ளது.

மேலும் இத்தீவிபத்து காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கலாமென அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கருத்து தெரிவிக்க