புதியவைவெளிநாட்டு செய்திகள்

ஜப்பான் நாட்டில் கடந்த சில நாட்களாக அரிய வகை பற்றீரியா நோய்!

ஜப்பானில் எஸ்.டி.எஸ்.எஸ். (STSS) எனப்படும் ஸ்டிரெப்டோகாக்கல் டாக்சிக் ஷாக் சிண்ட்ரோம் என்ற இந்த வகை நோய் தொற்றால் இதுவரை மொத்தம் 977 பேருக்கு பாதிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 941 ஆக இருந்ததுடன் ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் சுமார் 77 பேர் தொற்றுநோயால் உயிரிழந்துள்ளனர்.

இதன் பாதிப்பால், வீக்கம் மற்றும் தொண்டையில் வலி ஏற்படும் எனவும் சில பேருக்கு, காலில் வலி, வீக்கம், காய்ச்சல் மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் உள்ளிட்ட அறிகுறிகள் விரைவாக ஏற்படும் எனவும்
பின்னர், சுவாச பாதிப்பு, உடல் உறுப்புகள் செயலிழப்பு மற்றும் மரணம் ஆகியவை ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க