பாணந்துறையில் இருந்து மருதானை நோக்கி பயணித்த 8339 எனும் புகையிரதம் இன்று தடம் புரண்டுள்ளது.
மேலும் இப்புகையிரதத்தின் பெட்டியொன்று அருகில் உள்ள சமிக்ஞை பலகையில் மோதியதால் சமிக்ஞை அமைப்பு முற்றாக சேதமடைந்துள்ளது.
அத்தோடு புகையிரதம் தடம் புரண்டதால் கரையோர புகையிரத பாதை முற்றாக தடைப்பட்டுள்ளதோடு தண்டவாளத்தை சீரமைக்க கணிசமான காலம எடுக்குமென புகையிரத செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க