உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

பாதாள அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறுமி மீட்பு!

புத்தல – கட்டுகஹகல்கே பகுதியிலுள்ள வீடொன்றிற்கு கடந்த 9ம் திகதி வருகைத் தந்த மூன்று இளைஞர்கள், 14 வயது சிறுமியின் ஒருவரின் தந்தை மீது தாக்குதல் நடாத்தி, சிறுமியை கடத்திச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் பொலிஸார் நடாத்திய விசாரணைகளில், சிறுமியை காதலிப்பதாக கூறும் 20 வயதான இளைஞனினாலேயே இந்த சிறுமி கடத்திச் செல்லப்பட்டுள்ளதாகவும்
புத்தல பகுதியிலுள்ள பிரதான சந்தேகநபரின் உறவினர் ஒருவரின் வீட்டில் நிலத்திற்கு கீழ் அமைக்கப்பட்டிருந்த ஒரு பாதாள அறையிலேயே சிறுமி மறைத்து வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், குறித்த வீட்டை சோதனையிட்ட பொலிஸார், ஐந்து அடி உயரமும், ஆறு அடி அகலமும் கொண்ட இந்த அறையில், காற்றோட்டத்திற்காக இரண்டு தூளைகள் நிர்மாணிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நிலக்கீழ் பாதாள அறையிலிருந்து மீட்கப்பட்ட சிறுமி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்
இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அனைத்து சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க