இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பேருந்து தரிப்பிடத்தில் விபத்து

இன்று (ஜூன் 12) பாதுக்கவிலிருந்து புறக்கோட்டை நோக்கி பயணித்த தனியார் பேருந்தொன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து கொட்டாவ மாகும்பர நெடுஞ்சாலை இடைமாற்ற பேருந்து நிலையத்தின் கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு அருகே இருந்த மற்றொரு பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்து அருகேயுள்ள கண்காணிப்பு கெமராவில் (CCTV) பதிவாகியுள்ளதோடு விபத்து காரணமாக பேருந்திலிருந்த 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு பேருந்தின் தடுப்பு (பிரேக்) பழுதடைந்ததால் பேருந்து சாரதியால் பேருந்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதென தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் இந்த விபத்தில் பேருந்து நிலையம் பலத்த சேதமடைந்துள்ளதுடன் பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க