உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

யேமனில் படகு கவிழ்ந்து விபத்து

நேற்று (ஜூன் 11) யேமனில் புகலிடக்கோரிக்கையாளர்கள் உள்ளிட்ட பலரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 38 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுமார் 250 பேருடன் பயணித்த குறித்த படகு சீரற்ற காலநிலை காரணமாக கவிழ்ந்திருக்கலாமென யேமன் நாட்டின் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

மேலும் விபத்தில் காணாமல் போன நூற்றிற்கும் மேற்பட்டவர்களைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அத்தோடு இதுவரையில் 78 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக யேமன் நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கருத்து தெரிவிக்க