உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி மீண்டும் வெற்றி

கடந்த ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக இந்தியாவில் தேர்தல் நடைபெற்று முடிந்தது.
குறித்த தேர்தலின் இறுதி முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இதில் பாஜக தலைமையிலா தேசிய கூட்டணி 297 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இந்தியா கூட்டணி 229 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி வெற்றிப் பெற்றுள்ளார். சென்ற முறை 5 லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்ற நிலையில், தற்போது 1.52 வாக்குகள் வித்தியாசத்திலேயே வெற்றிப் பெற்றுள்ளார். காலையில் எண்ணப்பட்ட வாக்குகளில் இரண்டு சுற்றுகள் வரை பின்னடைவில் இருந்த மோடி பின் வாக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்க தற்போது வெற்றிப் பெற்றுள்ளார்.

வாரணாசி தொகுதியில் பாஜக சார்பில் மூன்றாவது முறையாக பிரதமர் மோடி போட்டியிட்டு வெற்றிப் பெற்றுள்ளார்.

கருத்து தெரிவிக்க