இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

நீராட சென்ற நபர் நீரில் மூழ்கி பலி

நேற்று (மே 31) கிரிபமுனேகம பொல்பித்திகம பிரதேசத்தில் வசிக்கும் 37 வயதுடைய நபர் தனது நண்பர்களுடன் பொல்பித்திகம புதிய ஏரியில் நீராடச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் ஏரிக்கரைக்கு அருகில் உள்ள மரத்தின் கிளைக்கு ஏறி ஏரியில் குதித்த போதே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

மேலும் இது குறித்து மேலதிக விசாரணைகளை பொல்பித்திகம பொலிஸார் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க