உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

ஜெர்மனியில் பொதுமக்கள் மீது கத்திகுத்து தாக்குதல்

ஜெர்மனியில் பொதுமக்கள் மீது கத்திகுத்து தாக்குதலை நடத்திய சந்தேக நபரை பொலிஸார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று (மே 31) ஜெர்மனியின் தென்மேற்கில் அமைந்துள்ள மன்ஹெய்ம் நகரின் மையப்பகுதியில் மார்க்பிளாட்ஸ் சதுக்கத்தில் நடைபெற்றுள்ளது.

மேலும்  இந்த தாக்குதல் சம்பவத்தில் ஏராளமானோர் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கான நோக்கம் குறித்து விசாரணை நடத்தி வரப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க