புதியவைவெளிநாட்டு செய்திகள்

ஈக்வடோர் நாட்டில் விமானம் விபத்துக்குள்ளாகி இருவர் உயிரிழப்பு!

ஈகுவடாரின் கடலோர நகரமான குவாயாகில் நகரில் இருந்து, எல் ஒரோ மாகாணம் சான்டா ரோசா நகர் நோக்கி சென்றுகொண்டிருந்த சிறிய ரக விமானம் ஒன்று நடுவானில் பறந்துகொண்டிருந்த நிலையில் என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மரங்கள் அடர்ந்த மலைப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் விமானி டேவிட் பரேனோ மற்றும் அகஸ்டோ வீரா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் அட்லியன் யும்பாலா பலத்த காயங்களுடன் உயிர்தப்பியமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க