இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பாராளுமன்றம் எதிர்வரும் மாதம் 4 முதல் 7 வரை கூடவுள்ளது

பாராளுமன்றம் எதிர்வரும் 4ம் திகதி முதல் 7ம் திகதி வரை கூடவுள்ளதாக பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் திருமதி குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.

கடந்த 28ம் திகதி சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில் இது தொடர்பான பாராளுமன்ற விவகாரங்கள் குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்போது ஜூன் 4ம் திகதி பெண்கள் வலுவூட்டல் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதமும் 5ம் திகதி கல்வித்துறை தொடர்பான பிரச்சனைகள் தொடர்பான ஒத்திவைப்பு விவாதமும் இலங்கையின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதமும் நடைபெறவுள்ளது.

ஜூன் 6ம் திகதி இலங்கை மின்சார சட்டமூலம் இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் நடத்தப்படவுள்ளதோடு
ஜூன் 7ம் திகதி வாய்மூல கேள்விகளுக்கான பதில் வழங்கிட நேரம் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க