உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

சட்டவிரோத மதுபானம் அருந்திய நால்வர் பலி!

தம்புள்ளை விகாரை சந்தி பகுதியில் சட்டவிரோத மதுபானம் அருந்தி மூன்று நாட்களுக்கு முன்னர் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் இந்நிலையில் நேற்று அதே மதுபானத்தை அருந்தி இருவர் உயிரிழந்துள்ளதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், விசாரணைகளை ஆரம்பித்த தம்புள்ளை பொலிஸார், உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனையில் மேலதிக இரசாயன பகுப்பாய்வு அறிக்கைகளை பெற்று அவர்களின் மரணத்திற்கான காரணங்களைக் கண்டறிய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

கருத்து தெரிவிக்க