புதியவைவெளிநாட்டு செய்திகள்

ஈக்குவாடோர் நாட்டை சேர்ந்த லாண்டி பராகா கோய்புரோ என்ற அழகி சுட்டுக்கொலை!

லாண்டி பராகா 2022-ம் ஆண்டு மிஸ் குவடார் அழகி போட்டியில் பங்கேற்றவர். இதற்கிடையே லாண்டி பராகா ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த நிலையில்
சிறிது நேரத்திற்கு பிறகு அந்த ஹோட்டலுக்கு இருவர் துப்பாக்கியுடன் வந்தனர். இதில் ஒருவர் வாசலிலேயே நின்று கொள்ள, மற்றொருவர் லாண்டி பராகா மற்றும் அவருடன் பேசி கொண்டிருந்த நபர் ஆகியோரை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

பின்னர் 2 மர்ம நபர்களும் அங்கிருந்து தப்பி சென்றனர். உடலில் 3 முறை குண்டு பாய்ந்ததில் லாண்டி பராகா உயிரிழந்தார். லாண்டி பராகாவுக்கும், போதை பொருள் கும்பல் தலைவன் லியாண்டிரோ நாரிரோ என்பவருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

கருத்து தெரிவிக்க