உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

மின் கட்டணத்தை மேலும் குறைக்க பரிந்துரை!

பொருளாதார நெருக்கடியைக் குறைப்பதற்காக துறைசார் மேற்பார்வைக்கான பாராளுமன்றக் குழுவானது மின் கட்டணத்தை மேலும் 20 சதவீதம் குறைக்க பரிந்துரைத்துள்ளது.

மேலும், மின்சார சபைக்கு கடந்த மூன்று மாதங்களில் ரூ.8,200 கோடி கிடைத்த இலாபத்தைக் கருத்திற்கொண்டு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு மற்றும் மின்சார சபை என்பன உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என குழுவின் தலைவர் காமினி வலேபொட தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் மக்களின் பொருளாதாரச் சிரமங்களை ஓரளவு குறைக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க