இலங்கைஉள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்

ரயில்வே ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று நள்ளிரவு ஆரம்பம்!!

ரயில்வே ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று நள்ளிரவு ஆரம்பிக்கப்படவுள்ளதாக லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளதுடன் இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் மேலும் பல தொழிற்சங்கங்களும் இணைந்துகொள்ளவுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் சந்தன லால் இன்று தெரணவிடம் கருத்து வெளியிட்டார்.

இதன்படி, புகையிரத சாரதிகள் சங்கம், புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் மற்றும் புகையிரத மேற்பார்வை முகாமையாளர்கள் சங்கம் ஆகியன இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க