Uncategorized

தென் கொரியாவில் மருத்துவர்கள் வேலை நிறுத்தம்

தென்கொரியாவில் மருத்துவர்கள் முன்னெடுத்துள்ள வேலை நிறுத்த போராட்டத்தால் அறுவை சிகிச்சைகளும் மருத்துவ சேவைகளும் தடைப்பட்டுள்ளன.

தென் கொரிய அரசாங்கத்தின் மருத்துவ கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், நோயாளர்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.

தென் கொரியாவில் மருத்துவர் – நோயாளி விகிதங்கள் மிகக் குறைவாக உள்ளதால், பயிற்சி மருத்துவர்களை பணிகளில் இணைக்கும் திட்டத்தை அரசாங்கம் கொண்டுள்ளது.

தென் கொரியா மருத்துவர்கள் உலகிலேயே அதிக ஊதியம் பெறுபவர்களாக உள்ளனர். 2022 ஆம் ஆண்டு வௌியான Organisation for Economic Co-operation and Development (OECD) அறிக்கையின் தரவுகளுக்கு அமைய, ஒரு பொது மருத்துவமனையில் மருத்துவ நிபுணர் ஒருவருக்கு சராசரியாக வருடத்திற்கு $200,000 ஊதியம் கிடைக்கிறது. இது தேசிய சராசரி ஊதியத்தை விட மிக அதிகம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், சுமார் 6,500 மருத்துவர்கள் தமது இராஜினாமா கடிதத்தை நேற்று (19.02) கையளித்துள்ளனர்.

 

கருத்து தெரிவிக்க