இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் விசேட அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பை ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் உரிய காலத்திற்குள் நடத்தப்படும் என்பதுடன் அடுத்த ஆண்டு பொதுத் தேர்தலுக்கான நிதி, 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தேர்தல்களை நடத்தும் பொறுப்பு தேர்தல் ஆணைக்குழுவைச் சார்ந்துள்ளதுடன் அரசாங்கம் இணைந்து செயற்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க