இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

உயர் இரத்த அழுத்தத்தால் முதியவர்களுக்கு எச்சரிக்கை

தெற்காசிய நாடுகளின் இலங்கையில் முதியவர்களில் நான்கில் ஒருவர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் பேராதனை போதனா வைத்தியசாலையின் நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் பேராசிரியர் உதய ரலபனாவ தெரிவித்துள்ளார்.

கொவிட் காரணமாக நாட்டில் நிலவும் பொருளாதார மந்தநிலை , சமூக, பொருளாதாரப் பிரச்சினைகலாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

உயர் இரத்த அழுத்தம் காரணமாக அமைதியான மரணம் ஏற்படுகிறது.இந்த நிலைமை மோசமாகும்போது மிகவும் அரிதாக கடுமையான தலைவலி மற்றும் தலைச்சுற்றல் ஏற்படலாம்.

தற்போது நிலவும் சூழ்நிலையில் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளமைக்கு மக்களிடையே உள்ள உயர் இரத்த அழுத்தமும் ஒரு காரணம். பக்கவாதம், சிறுநீரக செயலிழப்பு, மாரடைப்பு போன்ற நோய்கள் இரத்த அழுத்தத்தினால் ஏற்படுகிறது எனவும் கூறப்படுகிறது.

கருத்து தெரிவிக்க