இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

இரு மடங்காக அதிகரிக்கப்பட்ட வைத்தியர்களுக்கான கொடுப்பனவு

வைத்தியர்களுக்கான இடையூறு, இருப்பு மற்றும் போக்குவரத்து கொடுப்பனவை இரட்டிப்பாக்க ஜனாதிபதியின் முன்மொழிவுக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி கொடுப்பனவு 70,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. முன்னதாக இந்த கொடுப்பனவு 35,000 ஆக இருந்தது.

அத்துடன் பல்கலைக்கழக ஆசிரியர்களின் படிப்பிற்க்கான கொடுப்பனவிலும்; 25 வீத அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்பு அவர்களின் ஜனவரி மாத சம்பளத்தில் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் அரச பணியாளர்களுக்கு வழங்கப்படவிருந்த 10 ஆயிரம் ரூபாய் வாழ்க்கை செலவு கொடுப்பனவில் 5000 ரூபாய் ஜனவரி மாதத்தில் இருந்து வழங்கப்படும் என்றும் ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க