இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

நீடிக்கும் மழையுடனான காலநிலை: வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த 2 நாட்களில் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவிந்துள்ளது.
கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் பல இடங்களில் பி.ப. 2 மணிக்கு பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகிறது.
காலி, மாத்தறை, மற்றும் மத்திய மாகாணங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான ஓரளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்ப்பார்க்கபடுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மேலும் மின்னல் தாக்கங்களினால் எற்பக்கூடிய பாதிப்புக்களை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களை அறிவுறுத்துகின்றார்கள்.

கருத்து தெரிவிக்க