புதியவைவெளிநாட்டு செய்திகள்

ஐக்கிய அரபு இராச்சிய சிறைகளில் இருந்த 44 இலங்கையர்களுக்கு மன்னிப்பு!

ஐக்கிய அரபு இராச்சியம் முழுவதும் பல்வேறு சிறைகளில் இருந்த 44 இலங்கையர்களுக்கு அரச கட்டளையின் கீழ் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு இராச்சியத்தின்  வெளிவிவகார அமைச்சு, அபுதாபியில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

கடந்த டிசம்பர் 02ம் திகதி அன்று ஐக்கிய அரபு இராச்சியத்தின் 52 வது தேசிய தினத்தின் போது இலங்கைக் கைதிகள் அரச உத்தரவின் மூலம் மன்னிப்பு பெற்றனர்.

இலங்கை கைதிகளுக்கு மன்னிப்பு வழங்குவது இரு நாட்டின்  நட்புறவுகளை மேலும் வலுப்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரச மன்னிப்பைப் பெற்ற இந்த நாற்பத்து நான்கு இலங்கையர்கள் உரிய காலத்தில் ஐக்கிய அரபு இராச்சிய அரசினால் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் அபுதாபியில் உள்ள இலங்கைத் தூதரகம் ஐக்கிய அரபு இராச்சியத்தின் அரசாங்க அதிகாரிகள் மற்றும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சுடன் ஒத்துழைத்து அவர்கள் பாதுகாப்பான நாடு திரும்புவதை உறுதி செய்வார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

கருத்து தெரிவிக்க