இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

மூளைக் காய்ச்சலால் மாத்தறை சிறைச்சாலையைச் சேர்ந்த மற்றுமொருவர் உயிரிழப்பு!

மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மாத்தறை பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மாத்தறை சிறைச்சாலையைச் சேர்ந்த 54 வயது கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தின் பின்  சிறைக்குள் இறந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.

மாத்தறை சிறைச்சாலையின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். ஹேமந்த ரணசிங்க இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இலங்கை சிறைச்சாலைகளில் கூட்ட நெரிசல் காரணமாக நோய் பரவும் அபாயம் குறித்து மேலும் கவலை தெரிவித்த அவர், தற்போது நடைபெற்று வரும் இந்த பிரச்சனையில் உடனடி கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

 

கருத்து தெரிவிக்க