இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

பராக்கிரம சமுத்திரத்தின் அனைத்து மதகுகளும் திறக்கப்பட்டன

பொலன்னறுவை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக பராக்கிரம சமுத்திரத்தின் அனைத்து வான்கதவுகளும் நேற்று காலை முதல் தலா இரண்டடி வீதம் திறக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக நேற்று பொலன்னறுவை – மட்டக்களப்பு வீதியின் கல்லெல்ல மற்றும் மானம்பிட்டிக்கு இடையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆகவே மட்டக்களப்புக்கு செல்லும் வாகன சாரதிகள் கிரித்தலை, எலஹெர, பகமுனை மற்றும் தெஹியத்தகண்டிய ஊடாக மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க