இலங்கைஉள்நாட்டு செய்திகள்

ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளரின் அலுவலகத்தில் இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்!

ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளரான டைட்டஸ் பெரேராவின் கிருலப்பனையிலுள்ள தேர்தல் அலுவலகத்தின் மீது அடையாளம் தெரியாத குழுவினரால் இன்று காலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது அலுவலகத்தில் இருந்தவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் சம்பவத்தில் காயமடைந்துள்ள இருவர், சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த தாக்குதலில் அலுவலகம் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க