இலங்கை

கொரோனாவில் இருந்து மீண்ட பெண்ணிற்கு மீண்டும் கொரோனா தொற்று!

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பிய பெண்ணுக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அனுராதபுரம் – கெப்பிட்டிகொல்லாவ பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய பெண்ணுக்கே மீண்டும் கொரோனா தொற்றியுள்ளதாக அனுராதபுரம் வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.குறித்த பெண்குவைத்தில் இருந்து இலங்கை வந்துள்ள நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளானமையினால் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.அங்கிருந்து கொரோனா வைரஸ் குணமடைந்ததாக வைத்தியசாலையில் உறுதி செய்யப்பட்டதன் பின்னர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று அவருக்கு மீண்டும் கொரோனா அறிகுறிகள் காணப்பட்டமையினால் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்றியிருப்பது உறுதியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து அவரை IDH வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க