இந்தியா

தமிழக அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை: கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று அதிவேகமாக பரவி வரும் வேளையில் தமிழகஅரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் தெற்கு சன்னதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 100 நாள் வேலையை 200 நாளாக மாற்றி அனைத்துப் பகுதி மக்களுக்கும் வேலை கொடு, மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களிடம் பெற்றுள்ள அனைத்து சுய உதவிக்குழுக்களின் கடன்களை அரசு செலுத்தவேண்டும், வட்டி கேட்டு தொல்லை செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், முறைசாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் அரசு நிவாரணங்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நிகழ்த்தினர்

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: சென்னையில் மருத்துவர்கள் செவிலியர்கள் என்ற பாகுபாடின்றி அனைவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. தமிழக அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. சமீபத்தில் கடைபிடிக்கப்பட்ட ஊரடங்கு, முறையாக கடைப் பிடிக்கப்பட்டு, அந்த நேரத்தில் நோய்த் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு இருந்தால், இந்த பரவலை தடுத்து நிறுத்தியிருக்க முடியும், ஆனால் அரசு தட்டுத்தடுமாறி குழப்பங்களின் நாள், ஊரடங்கு வாபஸ் பெற்று விட்டு,இப்போது வேறு வழியில்லாமல் 4 மாவட்டத்திற்கு மட்டும் ஊரடங்கு அறிவித்துள்ளது. ஊரடங்கு அறிவித்தது அவசியம் என்று சொன்னால் கூட, இதனால் மட்டும் நோய் பரவலை தடுத்துவிட முடியாது.

எனவே ஒருங்கிணைந்த திட்டம் என்ற முறையில் தமிழக அரசு, நோயை கட்டுப்படுத்துவதற்கான அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களில் பரவலாக சோதனைகளை அதிகரிக்க வேண்டும் நோயை அடையாளம கண்டவர்களை அரசு தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும். நோய் தொற்று உடையவர்களுடன் தொடர்பு உள்ளவர்களையும் பரிசோதனை செய்து யாருக்கு நோய்த்தற்று உள்ளதோ அவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், ஜூன், ஜூலை மாதம் நோய் தொற்று மிக உச்சத்தை எட்டும் என்பதால் 1 லட்சம் மேற்பட்ட படுக்கைகளை அரசு தயார் செய்து வைக்கவேண்டும்.

மத்திய, மாநில அரசுகள் கரோனா தொற்று பரவல் இன்னும் சுமுகமான நிலை திரும்பாத நிலையில், மத்திய அரசு ஒரு குடும்பத்திற்கு 7500 ரூபாயும், மானில அரசு 5000ரூபாயும், நிவாரணத் தொகையாக வழங்கவேண்டும். மானில அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றார் கே.பாலகிருஷ்ணன்.

கருத்து தெரிவிக்க