உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பொது விவாதத்தில் கோட்டாபய பங்கேற்கவில்லை.

கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் இன்று இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர்களின் விவாத நிகழ்வில் கோட்டாபய பங்கேற்கவில்லை.

எனினும் ஏனைய பிரதான வேட்பாளர்களான சஜித் பிரேமதாஸ மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

மார்ச் 12 இயக்கத்தின் தலைமையில் தேர்தல்கள் கண்காணிப்பு மையமான பெபரல் இதனை ஏற்பாடு செய்திருந்தது.

இலங்கை நாட்டின் எதிர்காலம் குறித்து ஜனாதிபதி வேட்பாளர்களின் கருத்துக்களை ஒரே மேடையில் அறிந்துக்கொள்ளும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடு;ம் சுயாதீன வேட்பாளர்களும் பங்கேற்றனர்.

கருத்து தெரிவிக்க