உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

சமல் ராஜபக்ச கட்டுப்பணம் செலுத்தினார்

பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ச சற்று முன்னர் ஜனாதிபதி வேட்பாளருக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.

சுயாதீன வேட்பாளராகவே அவர் தமது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான வழக்கில் இன்று மாலை வழங்கப்படும் தீர்ப்பினால் அவருக்கு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாதுபோனால் அதற்கு பதிலாக சமல் ராஜபக்சவை ஆதரிக்கும் நிலைப்பாட்டை பொதுஜன பெரமுன எடுத்துள்ளது.

இதன் அடிப்படையிலேயே சமல் ராஜபக்ச கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.

கருத்து தெரிவிக்க