உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

மன்னாரில் சிறப்பாக இடம் பெறவுள்ள மாபெரும் சைவ எழுச்சி மாநாடு

மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் ஏற்பாட்டில் எதிர் வரும் 28 ஆம் திகதி சனிக்கிழமை மன்னாரில் மாபெரும் சைவ எழுச்சி மாநாடு இடம் பெற உள்ளதாக மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் தலைவர் சிவ சிறி மஹா தர்மகுமார குருக்கள் தெரிவித்தார்.
இவ்விடையம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
மாபெரும் சைவ எழுச்சி மாநாடு எதிர்வரும் சனிக்கிழமை காலை 8 மணி முதல் மதியம் 12 மணிவரை மன்னார் நகர மண்டபத்தில் இடம் பெற உள்ளது.
அன்றைய தினம் காலை 8 மணிக்கு நடராஜப் பெருமானின் திருவுருவச் சிலை ஏந்தியவாறு   எழுச்சி பேரணியானது மன்னார் பிரதான பாலத்தில் இருந்து ஆரம்பமாகி மன்னார் நகர மண்டபத்தை வந்தடையும்.
அதனைத் தொடர்ந்து காலை 9 மணிக்கு சைவ எழுச்சி மாநாடு இடம் பெறும்.குறித்த மாநாட்டிட்கு ஈழத்தின் பிர பல பேச்சாளர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.
குறித்த நிகழ்வில் கலந்து கொள்ளும் அனைவரையும் கலாச்சார உடையில் கலந்து கொள்ளுமாறு மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் தலைவர் சிவ சிறி மஹா தர்மகுமார குருக்கள் வேண்டு கோள் விடுத்துள்ளார்.

கருத்து தெரிவிக்க