உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

சிறுவர்களிற்கான திறன்விருத்தி செயலமர்வு!!

“சிறுவர்களின் வெற்றிக்காக பங்களிப்பு செய்வோம்” என்ற தொனிப்பொருளில் சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சிறுவர் திறன்விருத்தி செயற்பாடு வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று காலை இடம்பெற்றது.
மேலதிக அரச அதிபர் திரேஸ்குமார் தலைமையில், சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரி ஜெயகெனடியின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற நிகழ்வில் உதவி மாவட்டசெயலர் ந,கமலதாஸ், செட்டிகுளம்  பிரதேச்செயலாளர் க,சிவகரன், போதகர் றிக்கிலூயி, கிறிஸ்தவ வாலிபசங்க இணைப்பாளர் காந்தன், சிங்கப்பூர் பல்கலைகழக மாணவர்கள்,சமூகசேவை அலுவலர் ஶ்ரீனிவாசன், பாடசாலை மாணவர்கள்,மாவட்டசெயலக உயர் அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.
சிறுவர் எழுச்சியின் மூலம்  சமுதாயத்தில் போதை பழக்கத்தை அறவே நீக்கி, ஆரோக்கியமான சிறுவர்களை கட்டி எழுப்புவதனூடாக, நாட்டை கட்டி எழுப்புவதை  நோக்கமாக கொண்டு இவ் நிகழ்வு ஒழுங்குசெய்யபட்டுள்ளதாக வவுனியா மாவட்ட சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரி ஜெயகெனடி தெரிவித்தார்.
குறித்த நிகழ்வு பிரதேசரீதியாக பாடசாலை மாணவர்களின் பங்களிப்புடன்  தொடர்ந்து நடைபெறவுள்ள நிலையில் எதிர்வரும் 1 ஆம் திகதி இறுதி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க