வெளிநாட்டு செய்திகள்

கென்யாவில் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து 7 மாணவர்கள் பலி

கென்யா நாட்டின் திறன் மேம்பாட்டு பள்ளியில் இன்று காலை ஒரு வகுப்பறை திடீரென்று இடிந்து விழுந்து தரைமட்டமானது.

கட்டிட இடிபாடுகளுக்குள் 6, 7 மற்றும் 8ம் வகுப்புகளை சேர்ந்த மாணவர்கள் அனைவரும் சிக்கிக் கொண்டனர்.

தகவலறிந்து விரைந்து வந்த ராணுவ வீரர்கள் மற்றும் மீட்பு படையினர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 7 மாணவர்களின் உடல்களை மீட்டனர். பின்னர் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த 57 மாணவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க