உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

சென்.ஜோசப் பாடசாலையின் இரண்டு மாடி புதிய கட்டிடம் திறந்து வைப்பு

கல்வி அமைச்சின் அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் வேலைத்திட்டத்தின் கீழ் மத்திய மாகாண அட்டன் வலயத்திற்குட்பட்ட மஸ்கெலியா சென்.ஜோசப் ஆரம்ப பாடசாலையின் இரண்டு மாடி புதிய கட்டிடம் [23.09.2019] அன்று மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே.இராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

இந்த கட்டிடத்திற்காக கல்வி அமைச்சு 1.56 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

பாடசாலையின் அதிபர் திருமதி. எஸ்.வெலிங்டன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

திறந்து வைக்கப்பட்ட குறித்த கட்டிடத்தில் கேட்போர் கூடம், 7 வகுப்பறைகள் ஆகியன அமையப்பெற்றுள்ளன.

இப்பாடசாலையில் 594 மாணவர்கள் கல்வி கற்கின்றமை மேலும் குறிப்பிடதக்கது.

கருத்து தெரிவிக்க