பொன்மொழிகள்

வீரனாக விளங்கு! சுவாமி விவேகானந்தர்

  • மனிதன் தன் வாழ்க்கையைத் தானே உருவாக்கிக் கொள்கிறான். தனக்குத் தானே அமைத்துக் கொள்ளும் விதிகளைத் தவிர, வேறு எதற்கும் மனிதன் கட்டுப்பட்டவன் அல்ல.
  • இளைஞனே! வலிமை, அளவற்ற வலிமை இதுவே இப்போது தேவை. சிறந்த லட்சியத்துடன் முறையான வழியை பின்பற்றி தைரியத்துடன் வீரனாக விளங்கு.
  • உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து, அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.
  • பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது.

கருத்து தெரிவிக்க