உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

பாகிஸ்தான் பிரஜைகள் ஐவருக்கு ஆயுள்தண்டனை

இலங்கையில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் பிரஜைகள் ஐவருக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இலங்கைக்கு ஹெரோயின் போதைப்பொருளை கடத்தியமை, அவற்றை வைத்திருந்தமை, விற்பனை செய்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் பாகிஸ்தான் பிரஜைகள் மீது சுமத்தப்பட்டிருந்தன.

சந்தேகநபர்ள் தமது குற்றங்களை ஒப்புக்கொண்டதன் பின்னர் அவர்களுக்கான தீர்ப்பு அறிவிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க