உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

கடலில் மூழ்கி நெதர்லாந்து நாட்டவர் உயிரிழப்பு

திருகோணமலை இன்று குச்சவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட புறாத்தீவு பகுதிக்கடலில் நீராடிக்கொண்டிருந்த நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த 73 வயதுடையவர் உயிரிழந்ததாக குச்சவெளி தெரிவித்தனர்.

17 பேர் கொண்ட குடும்பமாக இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த நெதர்லாந்து நாட்டவரே இவ்வாறு மரணமானதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று காலை 10.55 மணியளவில் இம்மரணம் நிகழ்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் உள்ளிட்ட கொண்ட குடும்பம் இம்மாதம் 14 திகதியே இலங்கைக்கு வந்துள்ளதாகவும் இறந்தவரின் சடலம் திருகோணமலை பொது
வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்தாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்து தெரிவிக்க