உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

வவுனியா பொது வைத்தியசாலையில் வைத்தியர்கள் ஆர்ப்பாட்டம்!!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில்அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் நேற்றயதினம்  முன்னெடுக்கபட்ட போராட்டத்திற்கு வவுனியா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்களும் ஆதரவு தெரிவித்ததுடன் ஆர்பாட்டம் ஒன்றையும் முன்னெடுத்திருந்தனர்.
இன்று மதியம் 12.30 மணியளவில் வவுனியா வைத்தியசாலை வளாகத்தில்  குறித்த ஆர்பாட்டம் முன்னெடுக்கபட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள்….
வடக்கிழக்கில் வைத்தியர்களின் இடமாற்றத்தின் போது இவ்வளவு நாளும் இருந்து வந்த முறைமையை மாற்றி, புதிய முறை ஒன்றை உட்புகுத்துவதற்கு சுகாதார அமைச்சரான ராஜித சேனாரத்தினமுனைகின்றார்.
அது அவரது அரசியல் அனுகூலங்களிற்காகவே. இதன் காரணமாக வடகிழக்கில் பாரிய வைத்தியர் பற்றாகுறை ஏற்படுவதுடன், கஸ்ரபட்ட பிரதேசங்கள் வெகுவாக பாதிப்பை சந்திக்கும்.
எனவே மருத்துவர்களின் இடமாற்றவிடயத்தில் எந்த வித அரசியல் தலையிடும் இன்றி சுஜாதீனமான நிலையை ஏற்படுத்த வேண்டும் இல்லாவிடில் தமது போராட்டம் தொடரும் என்றனர்.
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வடகிழக்கிற்கு வைத்தியர்கள் வேண்டாமா,  விரைவில் இங்கு பாரிய வைத்தியர் பற்றாகுறை,இடமாற்றத்தில் அரசியல் தலையீடு வேண்டாம். என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தத்துடன் கோசங்களையும் எழுப்பி, பேரணியாக சென்றிருந்தனர்.

கருத்து தெரிவிக்க