பொன்மொழிகள்

அமைதி! கிருபானந்த வாரியார்

  • சிலர் எதற்காகப் பேசுகிறோம், சிலர் எந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகப் பேசுகிறோம் என்று வரைமுறையில்லாமல் பேசி விடுகிறார்கள். இதனால் எந்த ஒரு நன்மையும் உண்டாகப்போவதில்லை. ஆகவே, முடிந்தவரை அமைதியாக இருங்கள்.
  • நெருப்பு எரியும் இடத்தில் தான், புகை கிளம்பிக் கொண்டு இருக்கும். நெருப்பினால், நமக்குத் தேவையானவற்றை சூடுபடுத்திக்கொள்ளலாம். மற்றதேவைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், புகையினால் எந்தவொரு பயனும் விளையப்போவதில்லை.
  • பிறருடைய குற்றங்களை அலசி, ஆராயக்கூடாது. நாம் செய்த குற்றங்களை மூடிமறைக்கவும் கூடாது.

கருத்து தெரிவிக்க