உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

இலங்கை மின்சார சபை எக்காரணத்திற்காகவும் தனியார் மயப்படுத்தப்படாது

இலங்கை மின்சார சபை எக்காரணத்திற்காகவும் தனியார் மயப்படுத்தப்படமாட்டாதென அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபை 50 வருடங்களுக்கும் மேற்பட்ட வரலாற்றை கொண்டது. அதன் செயற்பாடுகள் நவீன முறையில் செம்மைப்படுத்தப்படும்.

மின்சார சபை மூலம் நாட்டு மக்களுக்கு அத்தியாவசிய சேவை வழங்கப்படுகிறது.

தடைகளை தாண்டி பயணிக்க வேண்டும். உற்பத்தி செலவுகளை குறைத்து பொதுமக்களுக்கு சலுகைகள் வழங்கப்படவேண்டும்.

நாட்டின் விரைவான வளர்ச்சிக்கு இலங்கை மின்சார சபை உந்துசக்தியாக அமையுமென மின்சக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க