உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

வைத்தியசாலை உத்தியோகத்தர்களை தாக்க முற்பட்ட நபர் கைது

டிக்கோயா கிளங்கன் பிரதேச வைத்தியசாலை உத்தியோகத்தர்களை தாக்க முற்பட்ட நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவரை இன்றையதினம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிளங்கன் வைத்தியசாலைக்கு மருத்துவ சான்றிதழொன்றை பெறுவதற்காக குறித்த நபர் சென்றுள்ளார்.

அவர் சான்றிதழை வைத்தியசாலையிலிருந்த உத்தியோகத்தர்களிடம் கோரியுள்ளார்.

எனினும் குறித்த சான்றிதழை தங்களால் வழங்க முடியாதெனவும் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையிலேயே பெறமுடியுமெனவும் உத்தியோகத்தர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனால் கோவமடைந்த நபர் உத்தியோகத்தர்கள் இருவர் மீது தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் மீது சேவைக்கு இடையூறு விளைவித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதேவேளை தாக்குதலுக்குள்ளான உத்தியோகத்தர்கள் அதே வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க