உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

கந்தளாயில் விபத்து; ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட 7ம் கட்டை பிரதேசத்தில் நேற்று இரவு சுமார் 11.30 மணியளவில் விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

அதிக வேகத்தில் சென்ற கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்ததில் குடைசாய்ந்து எதிரே இருந்த மின்கம்பத்தில்
மோதியதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த நபர் கந்தளாய் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர் .

காரில் பயணம் செய்தவர்கள் நான்கு பேரில் ஒருவருக்கே அதிகாயம் ஏற்பட்டதென்றும் மற்ற மூவரும் சிறு காயங்கள் ஏற்பட்டதென கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்தவர் கந்தளாய் வான்அலை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என
பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து சம்மந்தமான மேலதிக விசாரணையை கந்தளாய் பொலிஸார்
மேற்கொள்கின்றனர்.

கருத்து தெரிவிக்க